தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடக்கும் இடங்கள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்களை கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடக்கும் இடங்கள் அறிவிப்பு
Published on

தூத்துக்குடி:

அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசு சார்பில் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அந்தந்த தாசில்தார் தலைமையில் நடத்தப்படுகிறது. இந்த வாரத்துக்கான முகாம் நாளை (9-ந் தேதி) நடக்கிறது.

இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா மீளவிட்டான் பகுதி1, ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆழ்வார்கற்குளம், திருச்செந்தூர் தாலுகா மணப்பாடு, சாத்தான்குளம் தாலுகா பள்ளக்குறிச்சி, கோவில்பட்டி தாலுகா பிச்சைத்தலைவன்பட்டி, விளாத்திகுளம் தாலுகா நடுகாட்டூர், எட்டயபுரம் தாலுகா சிந்தலக்கரை, ஓட்டப்பிடாரம் தாலுகா மேலஅரசடி, கயத்தாறு தாலுகா காலாங்கரைபட்டி, ஏரல் தாலுகா சிவகளையில் நடக்கிறது.

இந்த முகாமில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளன.

எனவே பொதுமக்கள் இந்த முகாம்களில் மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com