ஆம்பூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து வாலிபர் பலி

ஆம்பூர் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் பலியானார் . பெண் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
ஆம்பூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து வாலிபர் பலி
Published on

ஆம்பூர்:

நாட்டறம்பள்ளியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48). இறைச்சி வியாபாரி. இவரது மனைவி சசிகலா (38).

இவர்கள் அதே பகுதியை சேர்ந்த சேகர் (25). அருள் (39). பிரசாத் (40). ஆகியோருடன் பள்ளிக்கொண்டாவில் நடைபெறும் காளை விடும் விழாவில் இறைச்சி வியாபாரம் செய்வதற்காக இன்று காலை காரில் வந்து கொண்டிருந்தனர்.

காரை பிரசாத் ஓட்டிவந்தார். ஆம்பூர் அருகே உள்ள ஜமீன் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சேகர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com