ஆம்புலன்ஸ் தாமதம்- நெஞ்சு வலியால் துடித்த டீக்கடைக்காரர் பலி

சோழிங்கநல்லூர் அடுத்த நாவலூரில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் நெஞ்சு வலியால் துடித்த டீக்கடைக்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆம்புலன்ஸ் தாமதம்- நெஞ்சு வலியால் துடித்த டீக்கடைக்காரர் பலி
Published on

காஞ்சீபுரம்:

சோழிங்கநல்லூரை அடுத்த நாவலூர் குடிசை மாற்று வாரியம் பகுதியை சேர்ந்தவர் மணி. டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. நேற்று காலை இருவரும் டீக்கடையில் இருந்தனர்.

அப்போது மணி திடீரென்று நெஞ்சு வலியால் துடித்தார். இதை பார்த்து பதறிய லட்சுமி உடனே ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் மணி மயங்கிய நிலையிலேயே கீழே விழுந்து கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

சுமார் 1 மணி நேரம் கழித்து ஆம்புலன்ஸ் வந்தது. அதில் மணியை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு லட்சுமி கதறி அழுதார். இதுபற்றி அவர் கூறுகையில், “ஆம்புலன்ஸ் சரியான நேரத்துக்கு வந்திருந்தால் எனது கணவர் உயிரை காப்பாற்றி இருக்கலாம். இப்போது நான் என்ன செய்வது என்று தெரியவில்லை” என்று கதறினார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “இப்பகுதியில் மருத்துவ வசதி கிடைப்பதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது. கடந்த 6 மாதங்களில் 7 பேர் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்துள்ளனர். 2 மாதத்துக்கு முன்பு முதியவர் ஒருவர் நெஞ்சு வலியால் துடித்தார். நாங்கள் ஆம்புலன்சுக்கு போன் செய்தோம். ஆனால் ஆம்புலன்ஸ் 3 மணி நேரத்துக்கு பின்பு வந்ததால் முதியவர் இறந்து விட்டார்.

இங்கிருந்து மருத்துவ வசதிக்காக படப்பைக்கு 9 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டும். எனவே இப்பகுதியில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com