என்னை மும்பைக்கு அழைப்பீர்களா, பிரதமரே..? - மோடியை நெகிழவைத்த டிரம்ப்

மும்பையில் நடைபெறும் தேசிய கூடைப்பந்து போட்டியை காண்பதற்கு என்னை அழைப்பீர்களா, பிரதமரே..? என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடியை நெகிழவைத்தார்.
மோடியுடன் டிரம்ப்
மோடியுடன் டிரம்ப்
Published on

நியூயார்க்:

இந்தியாவின் மும்பை நகரில் அடுத்த மாதம் 70 பள்ளிகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பங்கேற்கும் தேசிய கைப்பந்து போட்டி நடைபெறுகிறது.

இதை சுட்டிக்காட்டி பேசிய டொனால்ட் டிரம்ப், ‘இந்தியாவில் முதன்முறையாக அடுத்த வாரம் மும்பை நகரில் தேசிய கைப்பந்து போட்டி நடைபெறவுள்ளது. நான் அழைக்கப்படுவேனா.., மிஸ்டர் பிரதமரே? என்று மோடியை பார்த்து வேடிக்கையாக கேட்டார்.

அந்த ஆரவார ஓசை அடங்குவதற்காக சற்று இடைவெளி விட்ட டிரம்ப், ‘நான் வரகக்கூடும், கவனமாக இருங்கள், நான் வரக்கூடும்’ என மீண்டும் கூறினார்.

அவருக்கு பிறகு மேடையேறி பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கு வருமாறு டிரம்ப்புக்கு அழைப்பு விடுத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com