கென்யா ஓட்டலில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் - அல் ஷபாப் அமைப்பு பொறுப்பேற்றது

கென்யா தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் சோமாலியா பயங்கரவாதிகளான அல் ஷபாப் அமைப்பினர் இன்று திடீரென தாக்குதல் நடத்தினர். #KenyaHotelAttack #AlShabab
கென்யா ஓட்டலில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் - அல் ஷபாப் அமைப்பு பொறுப்பேற்றது
Published on

நைரோபி:

கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் இன்று பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்தனர். அவர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஓட்டல் வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் பற்றியெரிந்தன. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின.

பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து, அங்கு விரைந்த போலீசார் ஓட்டலில் இருந்தவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் தொடர்பான சேத விவரங்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், கென்யாவின் நைரோபி நகரில் ஓட்டலில் நடைபெற்ற தாக்குதலுக்கு சோமாலியா நாட்டை சேர்ந்த அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. #KenyaHotelAttack #AlShabab

X

Maalai Malar
www.maalaimalar.com