

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடைபெற்றபோது மந்திரியாக பதவி வகித்தவர், அசாம் கான். சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்பொது தெரிவித்து வம்பில் சிக்கிய அசாம் கான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு தற்போது எம்.பி.யாக உள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு கடந்த 2017-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இவரது மகனான அப்துல்லா அசாம் கான் ராம்பூர் மாவட்டத்துக்குட்பட்ட சுவார் தொகுதியில் போட்டியிட்டார்.