தனியார் பெண்கள் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் - சென்னை மாவட்ட ஆட்சியர்

சென்னையில் உள்ள தனியார் பெண்கள் விடுதிகள் அனைத்தையும் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். #ChennaiCollector #ShanmugaSundaram
தனியார் பெண்கள் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் - சென்னை மாவட்ட ஆட்சியர்
Published on

சென்னை:

பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காக தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் பணி காரணமாக விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் விடுதிகளும் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான கால அவகாசம் ஒரு மாதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பெற்று கொள்ளலாம் எனவும், பதிவு செய்யப்படாத தனியார் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். #ChennaiCollector #ShanmugaSundaram

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com