மதுவை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக்கொலை- நண்பர்கள் 3 பேர் கைது

பெரியபாளையத்தில் மதுவை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அடித்துக்கொலை செய்த நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுவை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக்கொலை- நண்பர்கள் 3 பேர் கைது
Published on

பெரியபாளையம்:

பெரியபாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கோகுல், அவரது நண்பர்களான முன்னூ, டெப்பாஜித், மொன்னா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் 4 பேரும் பெரியபாளையம்- யானம் பாக்கம் சாலையில் உள்ள மதுபானக் கடையில் மது அருந்தினர். அப்போது மதுவை பங்கு வைத்தபோது பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக திட்டிக் கொண்டனர். அப்போது நண்பர்கள் மூவரையும் கோகுல் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கோகுலை சரமாரியாக தாக்கினார்கள்.

இதில், படுகாயமடைந்து காது, வாய், மூக்கில் ரத்தம் வந்து கோகுல் உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் கோகுலை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் அனுமதித்தனர்.

கோகுலை தாக்கிய நண்பர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று கோகுல் பரிதாபமாக பலியானார்.

எனவே, குற்றவாளிகள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com