ஆலங்குடி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் பணம் கொள்ளை

ஆலங்குடி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் கொள்ளை
பணம் கொள்ளை
Published on

ஆலங்குடி:

ஆலங்குடி அருகே கீழப்பட்டி ராசியமங்களத்தை சேர்ந்தவர் செபஸ்தியான், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் கறம்பக்குடி, புதுக்கோட்டை மற்றும் அரசு பள்ளிகளில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ஆலங்குடி வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார்.

இவர் வங்கியில் தனது ஓய்வூதியம் ரூ.38 ஆயிரத்தை துணிப்பையில் எடுத்துக் கொண்டு அரச மரம் பஸ் நிறுத்தத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் தனியார் பஸ்சில் ஏறினார்.பஸ் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் கையில் வைத்திருந்த துணிப்பையில் பணத்தை காணவில்லை.பிளேடால் கிழிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மர்ம நபர் பிளேடால் பையை கிழித்து திருடப்பட்டதை அறிந்த செபஸ்தியான் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகார் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com