ஆலந்தூரில் ரெயிலில் அடிபட்டு மருத்துவ கல்லூரி மாணவி பலி

ஆலந்தூரில் ரெயிலில் அடிபட்டு மருத்துவ கல்லூரி மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் விபத்து
ரெயில் விபத்து
Published on

ஆதம்பாக்கம் ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் ஜோதி டாக்டராக இருக்கிறார். அவரது மகள் அனுசயா (17). இவர் இந்தோனேசியாவில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். நேற்று மாலை ஆலந்தூர் நிதிமேல்நிலைப்பள்ளி அருகே தண்டவாளத்தை கடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதனால் பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.  

பரங்கிமலை ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com