சோமாலியா மார்க்கெட்டில் வெடிகுண்டு தாக்குதல் - 5 பேர் பலி

சோமாலியா தலைநகர் மொகடிஷு அருகில் உள்ள மார்க்கெட்டில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகினர். #SomaliaMarket #Suicidebomb
சோமாலியா மார்க்கெட்டில் வெடிகுண்டு தாக்குதல் - 5 பேர் பலி
Published on

மொகடிஷு:

அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் மொகடிஷு நகரில் உள்ள பிரபல ஓட்டல் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், மொகடிஷுவில் உள்ள வான் லாயென் நகரில் உள்ள மார்க்கெட்டில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் பலியாகினர். மேலும், 10-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #SomaliaMarket #Suicidecarbomb 

X

Maalai Malar
www.maalaimalar.com