

கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவ தொடங்கியது. ஆரம்பத்தில் 6 மாவட்டங்களில் காணப்பட்ட இந்த நோய், மேலும் 3 மாவட்டங்களில் பரவி உள்ளது.
இதுவரை 13 ஆயிரத்து 13 பன்றிகள் பலியாகி இருப்பதாக அசாம் மாநில கால்நடை பராமரிப்புத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இதனால் பன்றி வளர்ப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.