

காபுல்:
ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தின் மொஷாகி பகுதியில் உள்ள தலிபான் பயங்கரவாதிகள் மீது ராணுவத்தினர் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தினர்.
ஆப்கன் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 17 பயங்கரவாதிகள் பலியாகினர். மேலும் இந்த தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களிடம் இருந்து வாகனங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.