

பெங்களூரின் எலஹங்கா விமானப்படை தளத்தில், பாதுகாப்புத் துறை மற்றும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் 'ஏரோ இந்தியா - 2019' சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்றுவருகிறது. மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 20-ம் தேதி இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளின் அதிவேக போர் விமானங்கள், கண்காட்சி மையங்கள் இடம்பெற்றுள்ளன. போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானமான, தேஜஸ் விமானமும் இந்த கண்காட்சியில் பறந்தது. அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ரபேல் விமானம் வானில் சீறிப் பாய்ந்து சாகசம் நிகழ்த்தியது.