நாமக்கல் அருகே விபத்தில் கணவன்-மனைவி படுகாயம்- உடனடி சிகிச்சைக்கு கலெக்டர் ஏற்பாடு

நாமக்கல் அருகே விபத்தில் சிக்கிய கணவன், மனைவியை கலெக்டர் ஆசியா மரியம் மீட்டு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.
நாமக்கல் அருகே விபத்தில் கணவன்-மனைவி படுகாயம்- உடனடி சிகிச்சைக்கு கலெக்டர் ஏற்பாடு
Published on

நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள களங்காணியை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 50). இவரது மனைவி நிர்மலா (45). இவர்கள் ரெட்டிப்புதூரில் ஜவுளிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மதியம் 12.30 மணி அளவில் இருவரும் கடையில் இருந்து ஒரு மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

களங்காணியில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், இவர்களது மொபட் மீது மோதியது. இதில் கங்காதரன், நிர்மலா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக ராசிபுரத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை பார்வையிட்ட கலெக்டர் ஆசியா மரியம், சேந்தமங்கலத்தில் நடக்கும் பயிற்சியை பார்வையிட சென்றார்.

அந்த நேரத்தில் விபத்து நடந்ததால் உடனடியாக மீட்பு பணியை முடுக்கிவிட்ட கலெக்டர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிட்டார். 108 ஆம்புலன்சு வர சற்று தாமதம் ஆனதால், செய்தி மக்கள் தொடர்பு துறையினர் சென்ற ஜீப்பில், படுகாயம் அடைந்த இருவரையும் ஏற்றி, உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.

அங்கு விபத்தில் படுகாயம் அடைந்த கங்காதரன் மற்றும் அவரது மனைவி நிர்மலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com