

ஷாங்காய் நகரில் உலகக்கோப்பை வில்வித்தை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீரரான அபிஷேக் ஷர்மா, வேகமாக முன்னேற்றம் அடைந்து வரும் வீராங்கனை ஜோதி சுரேகா ஆகியோர் இணைந்து துருக்கி இணையை எதிர்கொண்டனர்.
இதில் அபிஷேக் ஷர்மா - ஜோடி சுரேகா ஜோடி 154 - 448 என வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றது. முதல் சுற்றில் இந்திய ஜோடி 39-35 என முன்னணி பெற்றது. இந்த முன்னணிதான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதைத்தவிர இன்று நடைபெற்ற மற்ற போட்டிகளில் இந்திய அணிக்கு எமாற்றமே கிடைத்தது.
அபிஷேக் வர்மாவிற்கு இது 2-வது உலகக்கோப்பை பதக்கமாகும், ஒட்டுமொத்தமாக 7-வது பதக்கம் இதுவாகும். ஜோதியின் முதல் மிகப்பெரிய பதக்கம் இதுவாகும்.