சிறப்பு ரெயிலில் சென்ற 97 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மக்களவையில் மத்திய மந்திரி தகவல்

மாநில காவல்துறை தரவுகளின்படி, கடந்த 9.9.2020 வரை சிறப்பு ரெயில்களில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் 97 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ்கோயல் தெரிவித்தார்.
மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ்கோயல்
மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ்கோயல்
Published on

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ந்தேதியில் இருந்து முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் ரெயில், பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டது. இருப்பினும் அண்டை மாநிலங்களில் பிழைப்புக்காக தஞ்சம் அடைந்துள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக ஷராமிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இதில் பலர் பயணம் செய்து சொந்த மாநிலத்தை வந்தடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com