இருதய அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே ஓட்டு போட்ட 82 வயதான முன்னாள் ராணுவ அதிகாரி

சென்னையில் இருதய அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே முன்னாள் ராணுவ அதிகாரி வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #SathiyaBalan
சத்யபாலனுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த டாக்டர் சாய்சதீஸ்
சத்யபாலனுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த டாக்டர் சாய்சதீஸ்
Published on

ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் எந்த நிலையிலும் கடமை தவற மாட்டார்கள்.

இதை தனது 82-வது வயதிலும் நிரூபித்து காட்டி உள்ளார் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி.

டாக்டர் சத்யபாலன் (82). ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

சத்யபாலனுக்கு இதயத்துக்கு ரத்தம் செல்லும் வால்வு கால்சியம் படிந்து குறுகி சுருங்கி விட்டது. இதனால் இதயத்துக்கு ரத்த ஓட்டம் தடைபட்டது. வயதான காலத்தில் இந்த மாதிரியான பாதிப்பு ஏற்படுவது உண்டு என்கிறார்கள் டாக்டர்கள்.

மருத்துவ பரிசோதனையின்போது இதை கண்டு பிடித்த சென்னை அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் உடனடியாக ஆபரேசன் செய்ய வேண்டும் என்றனர்.

கடந்த 17-ந்தேதி ஆபரேசன் நடந்தது. அவரது காலில் இருந்து நரம்பை எடுத்து இதயத்தில் பழுதான நரம்புக்கு பதிலாக பொருத்த முடிவு செய்தனர். ஆனால் கால் நரம்பிலும் கால்சியம் காறை படிந்து இருந்தது. இதையடுத்து கால் நரம்பில் பலூன் வெடித்து சீர் செய்யப்பட்டது.

பின்னர் அந்த நரம்பை எடுத்து இதயத்தில் பழுதடைந்த நரம்பை அகற்றி விட்டு அதற்கு பதிலாக பொருத்தினார்கள். ஆபரேசன் அரை மணிநேரத்தில் முடிந்து விட்டது. அன்று மாலையே தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.

மறுநாள் வாக்குப்பதிவு நாள். சுயநினைவோடு இருந்த சத்யபாலன் கண்டிப்பாக ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று விரும்பினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com