உ.பி.யில் சோகம் - டிராக்டர் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் டிராக்டர் டிராலி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். #UPaccident
உ.பி.யில் சோகம் - டிராக்டர் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு
Published on

சம்பால்:

உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் இருந்து இன்று காலை ஏராளமான பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் அலிகர் நோக்கி சென்றுகொண்டிருநத்து. இந்த டிராக்டர் சம்பால் மாவட்டம் ராஜ்புரா பகுதியில் உள்ள அனுப்ஷாகர் சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

பின்னர், சாலையோர பள்ளத்தில் டிராக்டர் டிராலி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் கார்பெட்டுகள் விற்பனை செய்வதற்காக அலிகார்  நோக்கி சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. #UPaccident

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com