ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே 7 மாத பெண் குழந்தை குப்பை தொட்டியில் வீச்சு

ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே இன்று அதிகாலை குப்பை தொட்டியில் வீசப்பட்ட 7 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட பெண் குழந்தை.
மீட்கப்பட்ட பெண் குழந்தை.
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் ஓம் சக்தி கோவில் அருகே நகராட்சி குப்பைத் தொட்டி உள்ளது.

இன்று அதிகாலை 5 மணியளவில் குப்பைத் தொட்டியில் இருந்து குழந்தை அழுத சத்தம் கேட்டது. அப்பகுதியை சேர்ந்த செல்வி என்பவர் குப்பைத் தொட்டியில் சென்று பார்த்தார். அங்கு 7 மாத பெண் குழந்தை ஒன்று அழுதபடி கிடந்தது.

உடனடியாக குழந்தையை அவர் தூக்கினார். எறும்பு மற்றும் கொசுக்கடியால் குழந்தை உடல் முழுவதும் காயம் இருந்தது.

குழந்தையை அவர் ஜோலார்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து திருப்பத்தூரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

பெண் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற கல் நெஞ்சம் படைத்த தாய் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com