மேற்கு வங்காளத்தில் விஷ சாராயம் - 7 பேர் பலி

மேற்கு வங்காளத்தில் விஷ சாராயம் குடித்த பழங்குடி இனத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Liquor #WestBengal
மேற்கு வங்காளத்தில் விஷ சாராயம் - 7 பேர் பலி
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள சாந்திப்பூர் என்கிற பகுதியில் வசித்து வரும் பழங்குடி இனத்தை சேர்ந்த பலர் நேற்று முன்தினம் இரவு விஷ சாராயம் குடித்தனர். அடுத்து சில மணி நேரங்களில் அவர்களுக்கு வாந்தி, பேதி போன்ற உபாதைகள் ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 60 வயது மூதாட்டி ஒருவர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com