

சென்னை:
சென்னை அண்ணா சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி அப்பகுதியில் நள்ளிரவில் திறந்திருந்த ஓட்டலை மூடுமாறு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அவரை தாக்கினர். இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து ராசுக்குட்டி, சசிகுமார், திருநாவுக்கரசு, சுனில், அப்துல் ரகுமான், கிருஷ்ண மூர்த்தி ஆகிய 6 பேரை கைது செய்தனர். #tamilnews