

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய பாஜக அரசு சமீபத்தில் நீக்கி உத்தரவிட்டது. மேலும் ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு பின்னர், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் ஜம்மு-காஷ்மீருக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஷ்மீரின் சோபோர் நகரில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தின் மீது பயங்கரவாதிகள் இன்று கையெறி குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில் அங்கிருந்த பொதுமக்களில் 19 பேர் காயமடைந்தனர்.