டெங்கு கொசு ஒழிப்பில் மெத்தனம்- தற்காலிக பணியாளர்கள் 50 பேர் பணிநீக்கம்

வேலூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் மெத்தனமாக ஈடுபட்ட தற்காலிக பணியாளர்கள் 50 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கலெக்டர் சண்முகசுந்தரம்
கலெக்டர் சண்முகசுந்தரம்
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு 900-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். கடந்த மாதம் 480 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது.

இந்த மாதத்தில் 142 பேருக்கு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேர் இறந்துள்ளனர்.

இந்த நிலையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தற்காலிக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 910 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகளை செய்தனர்.

டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை சரியாக செய்யாத தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தற்காலிக பணியாளர்கள் 50 பேர் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் மெத்தனம் காட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து மாவட்டம் முழுவதும் 50 பேரை பணிநீக்கம் செய்து கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அவர்களுக்கு பதிலாக புதிதாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் தற்காலிக பணியாளர்கள் 50 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com