வேலூர் பெயிண்டர் கொலையில் 4 பேர் கைது - பரபரப்பு வாக்குமூலம்

வேலூரில் பெயிண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

வேலூர்:

வேலூர் தோட்டப்பாளையம் சோளாபுரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக் (வயது 26) பெயிண்டர். அரியூரில் அடித்து கொலை செய்யப்பட்டார். அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்று கொலையாளிகள் ராஜா, சேம்பர் ராஜா, மற்றும் சதீஷ் ,அமர் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

சதீசுடன் ஏற்பட்டபண தகராறில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சதீஷ் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:-

அசோக்கும் நானும் நண்பர்களாக பழகி வந்தோம்.அவர் எனக்கு ரூ.23 ஆயிரம் கடனாக கொடுத்த பணத்தை கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்தார். அதனால் நான் தோட்டப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று இதுபற்றி தட்டி கேட்டேன். அங்கு அசோக் இல்லை. சம்பவத்தன்று நான் தோட்டப்பாளையம் சென்றது சம்பந்தமாக அசோக் மற்றும் அவரது நண்பர் வந்து என்னிடம் கேட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் எனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அசோக்கை தாக்கியதில் அவர் இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.

போலீசார் 4 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com