

ஆம்பூர் அருகே பெரிய வரிகம் கிராமத்தில் உள்ள ஒரு தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர்கள் செல்வம் (வயது 25), கோதண்டன் (31), ரங்கநாதன் (46) ஆகிய 3 பேரும் விஷவாயு தாக்கி இறந்தனர்.
3 தொழிலாளர்கள் சாவுக்கு காரணமான அந்த தோல் தொழிற்சாலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடியாக இன்று சோதனை நடத்தினர். அதில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய போதிய உபகரணங்களை பயன்படுத்தாமல் விதிகளை மீறியது தெரியவந்தது.