3 லட்சம் பொதுச்சேவை மையங்கள் மூலம் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி

கிராமத்தில் உள்ள தொழில்முனைவோர்களிடம் வீடியோ மூலம் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள 3 லட்சம் பொதுச்சேவை மையங்கள் மூலம் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது என கூறினார். #DigitalIndiaKiBaatPMKeSaath #DigitalIndia
3 லட்சம் பொதுச்சேவை மையங்கள் மூலம் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி
Published on

பிரதமர் நரேந்திர மோடி கிராமத்தில் உள்ள தொழில்முனைவோர்களிடம் வீடியோ போன் மூலம் இன்று கலந்துரையாடினார். அப்போது பேசிய மோடி,

டிஜிட்டல் இந்தியா திட்டம் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக கிராமங்களை, இளைஞர்களுடன் ஒன்றிணைக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது. இது கடந்த நான்கு ஆண்டுகளாக தனி மனிதனின் தேவையை எளிதாக பெற உதவுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் டிஜிட்டல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பல டிஜிட்டல் இந்தியா பயனாளிகள் தங்கள் அனுபவத்தை தெரிவித்துள்ளனர்.


இந்த தொழில்நுட்பங்கள் மூலம் ரெயில் டிக்கெட்டுகள் பதிவு செய்யலாம், கட்டணாம் செலுத்தாலம் மற்றும் பல சேவைகளை எளிதாக செய்ய இது உதவுகிறது. இந்த சேவை அனைத்து துறைகளிலும் உள்ளது. அதற்காக பொதுசேவை மையங்களை வலுப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் உள்ள 3 லட்சம் பொதுச்சேவை மையங்கள் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் அதிகரித்துள்ளது. தொழில்முனைவோர்கள் அதிகரித்துள்ளனர்.

கிராமங்களில் இண்டெர்நெட் இணைப்பு அளிக்கப்பட்டதன் மூலம் பள்ளி மாணவர்கள் படிக்க மிகவும் வசதியாக உள்ளதாக பலர் தெரிவித்தனர். மேலும், வயதானவர்கள் தங்கள் பென்ஷன் பிரச்சனைகளை டிஜிட்டல் இந்தியாவின் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் எளிதாக சரிசெய்ய முடியும். பொருள் மற்றும் சேவை தொகையை எளிதாக செலுத்த வர்த்தகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் பிகிம் செயலியை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். #DigitalIndiaKiBaatPMKeSaath #DigitalIndia

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com