

தாம்பரம்:
போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சவார்த்தை கடந்த மார்ச் 7-ந் தேதி குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடந்தது.
இதில் 48 தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்து 2-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மீண்டும் குரோம்பேட்டையில் தொடங்கியது.
இதில் போக்குவரத்து துறை செயலாளர் சந்திரகாந்த் தாம்லே, நிதித்துறை துணை செயலாளர் வெங்கடேசன் மற்றும் போக்குவரத்து கழக 9 மண்டல மேலாண்மை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களில் இருந்தும் தலா 2 பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.