கல்லணை கால்வாயில் 27,095 கனஅடி தண்ணீர் திறப்பு

கல்லணை கால்வாயில் 27,095 கனஅடி தண்ணீர் திறப்பு

காவிரி ஆற்றில் 9512 கன அடி தண்ணீரும், வெண்ணாற்றில் 9507 கன அடி தண்ணீரும், கொள்ளிடம் ஆற்றில் 7065 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் 1011 கன அடியும் என மொத்தம் 27095 கன அடி திறக்கப்படுகிறது.
Published on

தஞ்சாவூர்:

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக கடந்த 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணையில் கடந்த 22-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

கல்லணையில் இருந்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் விவசாய பாசனத்துக்கு காவிரி ஆறு, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறு ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது காவிரி ஆற்றில் 9512 கன அடி தண்ணீரும், வெண்ணாற்றில் 9507 கன அடி தண்ணீரும், கொள்ளிடம் ஆற்றில் 7065 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் 1011 கன அடியும் என மொத்தம் 27095 கன அடி திறக்கப்படுகிறது.

கொள்ளிடத்தில் நேற்று 6 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் கொள்ளிடத்துக்கு 7 ஆயிரம் கனஅடி திறக்கப்படுகிறது.

கொள்ளிடத்தில் கூடுதலாக தண்ணீர் திறந்தால் கடலுக்கு வீணாக செல்லும் என்று டெல்டா விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com