கர்நாடகாவில் செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த 24 தமிழர்கள் மீட்பு

கர்நாடகாவில் செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த தமிழகத்தை சேர்ந்த 4 சிறுவர்கள், 5 பெண்கள் உள்பட 24 பேரை தனியார் தொண்டு நிறுவனத்தினர் போலீசார் உதவியுடன் மீட்டனர். #Hassan #LaborerRescued
கர்நாடகாவில் செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த 24 தமிழர்கள் மீட்பு
Published on

ஹாசன்:

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா மல்லஹள்ளி கிராமத்தில் உள்ள செங்கல் சூளைகளில் தமிழகத்தை சேர்ந்த 4 சிறுவர்கள், 5 பெண்கள் உள்பட 24 பேர் கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தனியார் தொண்டு நிறுவனத்தினர் சக்லேஷ்புரா தாசில்தார் மற்றும் போலீசார் உதவியுடன் அங்கு சென்று கொத்தடிமைகளாக இருந்த 24 பேரை மீட்டனர். அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் நடுசாலே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.  #Hassan #LaborerRescued 

X

Maalai Malar
www.maalaimalar.com