கொல்லிமலையில் 20 குழந்தைகள் மாயமா?- அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 20 குழந்தைகள் மாயமானது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். #Rasipuramnurse
கொல்லிமலையில் 20 குழந்தைகள் மாயமா?- அதிகாரிகள் ஆய்வு
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொல்லிமலையில் அதிக அளவில் குழந்தைகள் விற்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும் 20 குழந்தைகள் மாயமானதாக திடீர் தகவல் பரவியது. குழந்தைகளின் பெற்றோர்களிடம் பிறப்பு சான்றிதழ் மட்டும் இருப்பதாகவும், குழந்தைகள் அவர்களிடம் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:-

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளின் விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பதிவேட்டில் உள்ளபடி பிறந்த குழந்தைகள் அங்கு உள்ளார்களா? என்பது தொடர்பாக சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

20 குழந்தைகள் மாயமானதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. இது சம்பந்தமான கணக்கு எடுக்கும் பணி முடிந்தபிறகு தான் இதுபற்றி தெரியவரும்.

கொல்லிமலையை சேர்ந்தவர்கள் வெளியூர்களில் குழந்தை பிறந்து இருந்தால் பிறப்பு சான்றிதழ் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #RasipuramNurse

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com