வேன்-மோட்டார் சைக்கிள் மோதல் தாய்-மகன் பலி

சத்தியமங்கலம் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய்-மகன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொத்துக்காட்டை சேர்ந்தவர் சின்னம்மாள் (55) இவரது மகன் சாமி நாதன் (27). கட்டிட தொழிலாளர்கள்.

இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலம்- கோபி ரோட்டில் எருமைபடை பள்ளம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் மோதியது.

இதில் சின்னம்மாள், சாமிநாதன் ஆகியோர் பலியானார்கள்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com