நெய்வேலியில் பட்டதாரி பெண்கள் 2 பேர் மாயம்: போலீசார் விசாரணை

நெய்வேலியில் தோழி வீட்டுக்கு சென்ற பட்டதாரி பெண்கள் 2 பேர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் 2 பெண்களை தேடி வருகிறார்கள்.
நெய்வேலியில் பட்டதாரி பெண்கள் 2 பேர் மாயம்: போலீசார் விசாரணை
Published on

நெய்வேலி மந்தாரக்குப்பம் சிவாஜி நகரை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவரது மகள் மதுமதி (வயது 24). இவரின் உறவினர் சங்கீதா (29). இவர்கள் இருவரும் பட்டதாரி ஆவார்கள்.

சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் வடலூரில் உள்ள தனது தோழிகள் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றனர்.

ஆனால் அவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவர்களை பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இது குறித்து மதுமதியின் சகோதரர் ராஜா நெய்வேலி மந்தாரக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 பட்டதாரி பெண்களை தேடி வருகிறார்கள். நெய்வேலியில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு 3 இளம்பெண்கள் ஒரே நாளில் மாயமாகினர். அதேபோல் இப்போதும் 2 பட்டதாரி பெண்கள் மாயமாகி உள்ளனர்.

தொடர்ந்து இளம்பெண்கள் மாயமாகி வரும் சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com