

சேலம்:
மல்லூர், துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 17-ந்தேதி (புதன் கிழமை) நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மல்லூர்-நகர், பனமரத்துப்பட்டி, திருமனூர், பாரப்பட்டி, ஓண்டியூர், கீரனூர்வலசு, கீரனூர், நெ.3.கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, அனந்தகவுன்டம்பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி, வெண்ணந்தூர், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
துணைமின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே அதனைச் சுற்றியுள்ள இளம்பிள்ளை-நகர், காந்தி நகர், தப்பகுட்டை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம், காக்காபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இந்த தகவலை செயற்பொறியாளர் சசிசேகரன் தெரிவித்துள்ளார்.