சென்னை விமானம் நடுவானில் கோளாறு - 150 பயணிகள் தப்பினர்

சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை ஷார்ஜா சென்ற விமானம் எந்திர கோளாறால் தரையிறக்கப்பட்டதை அடுத்து 150 பயணிகள் உயிர் தப்பினர்.
சென்னை விமானம் நடுவானில் கோளாறு - 150 பயணிகள் தப்பினர்
Published on

ஆலந்தூர்:

சென்னையில் இருந்து இன்று காலை 5 மணி அளவில் ஷார்ஜா விமானம் 150 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களுடன் புறப்பட்டது. பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பயணம் செய்தனர்.

நடுவானில் பறந்து கொண்டிருந்த போது எந்திர கோளாறு விமானியால் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சாதுர்யமாக செயல்பட்டு விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து அவசரமாக விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. சுமார் 6.45 மணிக்கு விமானம் தரையிறங்கப்பட்டது. 150 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களும் பாதுகாப்பாக தரையிறங்கினர்.

பயணிகள் அனைவரும் சென்னை மற்றும் அருகில் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த விமானம் சரி செய்யப்பட்டு இன்று அல்லது நாளை காலை புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com