குன்றத்தூரில் வங்கி பெண் ஊழியரிடம் 12 பவுன் நகை பறிப்பு

குன்றத்தூரில் வங்கி பெண் ஊழியரிடம் 12 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
குன்றத்தூரில் வங்கி பெண் ஊழியரிடம் 12 பவுன் நகை பறிப்பு
Published on

பூந்தமல்லி:

குன்றத்தூர் சரவணநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் லூகிஸ். வண்டலூர் - மீஞ்சூர்ரிங் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி டெய்சிராணி. குன்றத்தூரில் உள்ள வங்கியில் பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று இரவு மொபட்டில் கணவரின் ஓட்டலுக்கு சென்று கொண்டிருந்தார். வண்டலூர்- மீஞ்சூர்ரிங் சாலையில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் டெய்சி ராணியை வழிமறித்து அவரை மிரட்டி 12 பவுன் தாலி செயினை பறித்து விட்டு தப்பினர்.

இதுகுறித்து அவர் குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com