கடந்த 6 மாதத்தில் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த 115 காஷ்மீர் இளைஞர்கள்

காஷ்மீரில் கடந்த 6 மாதத்தில் மட்டும் பயங்கரவாத இயக்கத்தில் 115 இளைஞர்கள் இணைந்து உள்ளதாகவும் அவர்கள் சோபியாலி, புலவாமா, பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. #Kashmiriyouth
கடந்த 6 மாதத்தில் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த 115 காஷ்மீர் இளைஞர்கள்
Published on

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தினர் இந்தியாவில் நாசவேலையில் ஈடுபடுகிறார்கள். இந்த அமைப்புகள் காஷ்மீரில் அப்பாவி இளைஞர்களையும், படித்த வாலிபர்களையும் அந்த அமைப்பில் சேர்த்து வருகிறது.

இந்த நிலையில் காஷ்மீரில் எம்.பி.ஏ. பட்டம் படிக்கும் மாணவர் ஒருவர் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான லஷ்கர்- இ-தொய்பாவில் இணைந்துள்ளார்.

அந்த வாலிபரின் பெயர் இஷ்பக்வாணி. 26 வயதான அவர் தெற்கு காஷ்மீர் பகுதி புல்வாமா மாவட்டத்தை சேர்ந்தவர். அந்த வாலிபருக்கு லஷ்கர்-இ- தொய்பா அமைப்பில் ‘அபுதுராப்’ என்ற குறியீடு பெயர் வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த இஷ்பக் வாணி ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் இருக்கும் படம் சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இஷ்பக் மாயமானதாக அவரது குடும்பத்தினர் கடந்த 22-ந்தேதி போலீசில் புகார் கொடுத்து இருந்தனர். அவர் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் பி.எச்.டி. மாணவர் பஷீர்வாணி பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து இருந்தார்.

இதில் 91 பேர் ஹிஸ்புல்-மு ஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ- தொய்பாவில் இணைந்துள்ளனர். மீதியுள்ளவர்கள் அல்கொய்தா ஆதரவு அமைப்பான அன்சார் சஸ்வத்-ஹிந்த் மற்றும் காஷ்மீர் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com