இலங்கை குண்டுவெடிப்பு- பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. #SriLankaAttacks #SriLankaBlast
இலங்கை குண்டுவெடிப்பு- பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு
Published on

இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன்பின் அன்று மதியம் 2 மணியளவில் இரு தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்து உள்ளனர்.  500 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.  இதுவரை 76 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

வங்காளதேசம்- 1
சீனா-2
இந்தியா - 11
டென்மார்க் - 3
ஜப்பான் -1
நெதர்லாந்து- 1
போர்ச்சுகல்- 1
சவுதி அரேபியா - 2
ஸ்பெயின் -1
துருக்கி -2
இங்கிலாந்து- 6
அமெரிக்கா -1

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை வைத்துள்ள 2 பேர், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை நாட்டின் குடியுரிமை வைத்துள்ள 2 பேர் என 36 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com