சென்னையில் வருமான வரித்துறை சோதனை - இன்று மேலும் 100 கிலோ தங்கம் சிக்கியது

சென்னை மற்றும் அருப்புக்கோட்டை எஸ்பிகே கட்டுமான குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ரூ.80 கோடி ரொக்கத்துடன் 100 கிலோ தங்கம் சிக்கியுள்ளது.
சென்னையில் வருமான வரித்துறை சோதனை - இன்று மேலும் 100 கிலோ தங்கம் சிக்கியது
Published on

சென்னை:

சென்னை மற்றும் அருப்புக்கோட்டை எஸ்பிகே கட்டுமான குழுமத்திற்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

வரிஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சென்னை, அருப்புக்கோட்டை,மதுரை உட்பட 30 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அருப்புக்கோட்டையில் செய்யாதுரை என்பவருக்கு சொந்தமான எஸ்பிகே நிறுவனத்தின் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த சோதனையில், ரூ.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஜாய்ஸ் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முட்டை கொள்முதல் ஊழல் தொடர்பாக  பல்வேறு இடங்களில் கடந்த வாரம் வருமான வரி சோதனை நடந்த நிலையில் இன்று நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com