மாலை நேர சிற்றுண்டி தக்காளிப்பழ ஊத்தப்பம்

பல்வேறு வகையான ஊத்தப்பம் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மாலை நேரத்தில் சாப்பிட, எளிய முறையில் செய்யக்கூடிய தக்காளி ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மாலை நேர சிற்றுண்டி தக்காளிப்பழ ஊத்தப்பம்
Published on

தோசை மாவு - 1 கப்,
தக்காளிப்பழம் - 2,
மிளகு சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - கால் டீஸ்பூன்,

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.

தக்காளிப்பழத் துண்டுகளை வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊத்தப்பமாக ஊற்றி தக்காளிப்பழத் துண்டுகளை அதன் மேல் பரப்பவும்.

அடுத்து இதில் உப்பு, மிளகு சீரகத்தூள் தூவி சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிடவும்.

நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டுப் பொன்னிறமானதும் எடுத்து சட்னிகளுடன் பரிமாறவும்.

சூப்பரான தக்காளிப்பழ ஊத்தப்பம் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com