நோயை எதிர்த்து உடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளை தோசை

தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும். இன்று தூதுவளை சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
நோயை எதிர்த்து உடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளை தோசை
Published on

தூதுவளை கீரை - அரை கப்
இட்லி அரிசி - 1 கப்
உளுந்து - கால் கப்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
இஞ்சி, மிளகாய் விழுது - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவைக்கு

தூதுவளை கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.

அரிசி, உளுந்து இரண்டையும் மூன்று மணி நேரம் ஊறவைத்து மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

வெந்தயத்தையும் ஊறவைத்து அதனுடன் தூதுவளை சேர்த்து அரைத்து மாவு சேர்க்க வேண்டும்.

பின்னர் மாவு கலவையுடன் உப்பு சேர்த்து சில மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

அதன் பிறகு மாவுடன் இஞ்சி மிளகாய் விழுதை கலந்து கொள்ள வேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

சூப்பரான தூதுவளை தோசை ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com