

காளான் - 200 கிராம்
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காய்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
கடலை மாவு - 5 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
* காளானை நன்றாக கழுவி நீளமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் நீளமாக காளான், நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
* அடுத்து அதனுடன், அரிசி மாவு, கடலை மாவு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த காளான் மாவை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
* சூப்பரான காளான் பக்கோடா ரெடி!