கட்டுப்பாடுகள் குழந்தைகளின் மனதை காயப்படுத்தும்

கட்டுப்பாடுகளும் குழந்தைகளின் மனதை காயப்படுத்தும் என்ற ரகசியத்தை தெரிஞ்சுக்கோங்க. உங்கள் செல்லங்களின் கண்காணிப்பில் கூடுதலாக ஒரு கண் வையுங்கள்!
கட்டுப்பாடுகள் குழந்தைகளின் மனதை காயப்படுத்தும்
Published on

குழந்தைகள் காணாமல்போக கடத்தலும் காரணமாக இருக்கலாம். மே 25-ம் தேதி ‘உலக குழந்தை கடத்தல் தடுப்பு தினமாகும். குழந்தைகள் கடத்தல் பற்றிய உலகளாவிய ஆய்வு சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா? “பிள்ளைகளின் நலன் கருதி அக்கறையுடன் நாம் விதிக்கும் கட்டுப்பாடுகள்கூட குழந்தைகளின் மனதுக்குள் காயம்போல பதிந்திருக்கும்.

அந்த கட்டுப்பாடுகளை உடைக்கும் வகையில், அவர்கள் மீது அக்கறை காட்டுவதுபோலவும், ஆசைகளை நிறைவேற்றுவதுபோலவும் ஒருவர் பேசிவிட்டால் குழந்தைகள் உடனே அவர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்கிச் சென்றுவிடுவார்கள்.” என்கிறது அந்த ஆய்வு.

உன்னுடன் விளையாட ஒரு அழகிய நாய்க்குட்டியை பிடித்துத் தருகிறேன் வருகிறாயா? என்று கேட்டால் உடனே ஆசையாய் தலையசைக்கும் குழந்தைகள்தான் அனேகம். அதனால்தான், “ஒன்பது பேரில் 7 குழந்தைகள் முன்பின் தெரியாதவர்களுடன் 90 வினாடிகளுக்குள் சென்றுவிடுவதாக” ஆய்வில் கணிக்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com