வேலைக்கு மத்தியில் ஓய்வு தேவை

எந்த வேலையையும் பரபரப்பின்றி, நிதானமாக ஓய்வுக்கு மத்தியில் செய்து பழகுவதே சிறந்தது.
வேலைக்கு மத்தியில் ஓய்வு தேவை
Published on

அந்த செயல்களைப்பை போக்கி மனச்சோர்வை நீக்குவதற்கு உதவும். பொதுவாக மனம் சோர்வடைவதே களைப்பு தோன்றுவதற்கு காரணமாகிறது. அந்த சமயத்தில் செய்கின்ற வேலையில் இருந்து வேறு விஷயங்களுக்கு கவனத்தை திருப்புவதே மனதிற்கு தேவையான ஓய்வை கொடுத்துவிடும். சிலர் செய்யும் வேலையை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்ற சிந்தனையிலேயே மூழ்கியிருப்பார்கள்.

முழு கவனத்தையும் அந்த வேலை மீதே பதிக்கும்போது மனம் அழுத்தத்திற்கு உள்ளாகிவிடும். அது தேவையில்லாத நெருக்கடியை ஏற்படுத்திவிடும். பதற்றமும், பயமும் கூடவே தொற்றிக்கொள்ளக்கூடும். எப்படி வேலையை முடிக்கப்போகிறோமோ? என்ற கவலையையும் எட்டிப்பார்க்க வைத்துவிடும்.

வேலைக்கு மத்தியில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதால் நேரம் வீணாகி போய்விடுமே என்ற கவலை சிலரிடத்தில் காணப்படும். அந்த ஓய்வு ஒருபோதும் வேலைக்கு முட்டுக்கட்டையாக அமையாது. வேலையை துரிதமாக செய்து முடிப்பதற்கான அடுத்த கட்ட திட்டமிடலுக்காகவும் அந்த ஓய்வை பயன் படுத்திக்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com