வேர்க்கடலைப் பொடி மசாலா ஊத்தப்பம்

காய்கறிகள், வேர்க்கடலை பொடி தூவி ஊத்தப்பம் செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த ஊத்தப்பத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வேர்க்கடலைப் பொடி மசாலா ஊத்தப்பம்
Published on

தோசை மாவு - 1 கப்,
வேர்க்கடலைப் பொடி - தேவையான அளவு,
வெங்காயம், தக்காளி - தலா 1,
கொத்தமல்லி -  சிறிது,
தோல் சீவிய இஞ்சித்துருவல் - 1 டீஸ்பூன்,
கேரட் துருவல் - 5 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தோசை மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, கேரட் துருவல், உப்பு, கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மாவை சிறிய ஊத்தப்பங்களாக ஊற்றி, அதன் மீது தேவையான அளவு வேர்க்கடலைப் பொடியை தூவவும்.

பிறகு சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

சூப்பரான வேர்க்கடலைப் பொடி மசாலா ஊத்தப்பம் ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com