குதிரை வாலி தேங்காய் சாதம்

சிறுதானிய உணவை அடிக்கடி சாப்பிடுவது உடலுக்கும் மிகவும் நல்லது. இன்று குதிரைவாலி அரிசியில் தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
குதிரை வாலி தேங்காய் சாதம்
Published on

குதிரை வாலி சாதம் - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - முக்கால் கப்,
உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவைக்கு,
கடுகு - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயம் - சிட்டிகை,
காய்ந்த மிளகாய் 3.

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வறுத்த வேர்க்கடலை, பெருங்காயம், மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வறுக்கவும்.

பிறகு வடித்த சாதம் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com