வீட்டிலேயே பழனி பஞ்சாமிர்தம் செய்வது எப்படி

பழனி பஞ்சாமிர்தம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த பஞ்சாமிர்தத்தை அதே சுவையுடன் வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வீட்டிலேயே பழனி பஞ்சாமிர்தம் செய்வது எப்படி
Published on

வாழைப்பழம் அல்லது மலை வாழைப்பழம் - 6,
பேரீச்சை - 20
காய்ந்த திராட்சை - கால் கப்
தேன் - 1/2 கப்,
நெய் - 2 டீஸ்பூன்
வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை - அரை கப்
பனங்கற்கண்டு - கால் கப்
ஏலக்காய் - 2


செய்முறை :

* பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

* வாழைப்பழத்தை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

* வாயகன்ற ஒரு பாத்திரத்தில் வாழைப்பழம், பேரீச்சை, காய்ந்த திராட்சை, தேன், நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, ஏலக்காய் பொடித்தது போட்டு பிசையவும்.

* கடைசியாக நெய் சேர்த்து கலக்கவும். பஞ்சாமிர்தமாக தயார் செய்து முருகனுக்குப் படைத்து, பரிமாறவும்.

* சுவையான சத்தான பழனி பஞ்சாமிர்தம் ரெடி.

* இதனை உடனே அல்லது 1 நாள் வரை வெளியில் வைத்து சாப்பிடலாம். விரும்பினால் 3 அல்லது 4 நாட்கள் பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.

குறிப்பு :

* கண்டிப்பாக நெய் சேர்க்க வேண்டும். அப்போது தான் அதன் சுவை வரும். இதில் கொடுக்கப்பட்டுள்ள அளவு நெய்யை மட்டும் சேர்த்தால் போதுமானது. அதிகமாக சேர்க்க வேண்டாம்.

* வட இந்தியர்கள் 2 வாழைப்பழம், 1 கப் காய்ச்சாத பால், கோதுமை மாவு, ஏலக்காய்த்தூள், காய்ந்த திராட்சை, முந்திரி, நெய், தேன், ஜாதிக்காய் தூள், சிறிது தேங்காய்த் துருவல் எனக் கலந்து தயாரிப்பார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com