உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மூலிகை டீ

சளி, காய்ச்சல், உடல்வலியால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை டீயை போட்டு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இன்று இந்த டீயை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மூலிகை டீ
Published on

சுக்கு - 20 கிராம்,
தனியா - 20 கிராம்,
இஞ்சி - 30 கிராம்,
திப்பிலி - 1 டீஸ்பூன்,
புதினா - ஒரு கொத்து,
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்,
பனை வெல்லம் - 200 கிராம்,

தண்ணீர் - 1 லிட்டர்.

வெறும் கடாயில் தனியாவை வறுத்து ஆறியதும இடித்து கொள்ளவும்.

பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் விட்டு, அதில் தட்டிய இஞ்சி, மிளகு, திப்பிலி, சுக்கு, தனியா சேர்த்து கொதிக்க விடவும்.

பின்பு மிக்சியில் புதினா, சிறிது நீர் விட்டு அரைத்து புதினா சாறு எடுத்து கொதிக்கும் தேநீரில் ஊற்றவும்.

இறுதியாக பனை வெல்லம் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடித்து பரிமாறவும்.

சூப்பரான மூலிகை தேநீர் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com