search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    நாவில் எச்சில் ஊறும் கத்திரிக்காய் பஜ்ஜி
    X

    நாவில் எச்சில் ஊறும் கத்திரிக்காய் பஜ்ஜி

    • பொதுவாக உருளைக்கிழங்கு, வெங்காயத்தில் தான் பஜ்ஜி செய்து சாப்பிடுவோம்.
    • இன்று சற்று வித்தியாசமாக கத்தரிக்காய் கொண்டு பஜ்ஜி செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    பெரிய கத்திரிக்காய் - 2

    எண்ணெய் - பொரிக்க

    கடலை மாவு - 1 கப்

    அரிசி மாவு - 1/4 கப்

    பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்

    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    செய்முறை:

    * கத்திரிக்காயை நீள வாக்கிலோ அல்லது வட்ட வடிவிலோ வெட்டிக் கொள்ளுங்கள்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

    * பின் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

    * நறுக்கிய கத்திரிக்காயை பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான கத்திரிக்காய் பஜ்ஜி தயார்.

    Next Story
    ×