ருசிக்கும் ஆவலைத்தூண்டும் அவல் கீர்

உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடியது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவர்.
ருசிக்கும் ஆவலைத்தூண்டும் அவல்  கீர்
Published on

இது சுவையான பானம் மட்டுமல்ல. உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடியதும் கூட. அவலில் கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து, நார்ச்சத்து, ஆக்சிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் அடங்கியிருக்கின்றன. ருசிக்கும் ஆவலைத் தூண்டும் அவல் பால் கீர் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாமா?

தேவையான பொருட்கள்:

அவல்- ஒரு கப்

பால்- 3 கப்

வெல்லம்- 1/2 கப்

நெய்- 1 ஸ்பூன்

முந்திரி- 10

உலர் திராட்சை- 2 ஸ்பூன்

கன்டென்ஸ்டு மில்க்- 1/4 கப்

ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, அதில் முந்திரி, உலர் திராட்சையை வறுத்து எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும். பின்னர் அதே நெய்யில் அவல் சேர்த்து மொறுமொறு என்று பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். அதில் வறுத்து வைத்துள்ள அவல் சேர்த்து வேகவைக்க வேண்டும்.

பின்னர் அதில் முந்திரியை ஊறவைத்து அரைத்துச் சேர்த்து கொதிக்கவிடவும். தொடர்ந்து, அதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கொதிக்கவிடுங்கள். இதனால் கீர் நன்கு கெட்டி யாகி வரும். கடைசியாக வெல்லத்தை பாகு காய்ச்சி சேர்த்து கொதிக்கவிடவும்.

பின்னர் ஏலக்காய்தூள் சேர்த்து இறக்கினால், சூடான, சுவையான அவல் பால் கீர் ரெடி. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்துவார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com